நம் மக்களில்
பெரும்பாலானோர் காட்டுத்தீ என்றவுடனே அது காட்டுக்குள் மூங்கிலோடு மூங்கில் உரசி
தீப்பிடிப்பதாக நம்புகின்றனர். நம் நாட்டு காட்டுத்தீ அனைத்தும் மனிதர்களால்
வைக்கப்படும் தீ. பழி வாங்க துடிக்கும் குணமுள்ள மனிதர்களின் கொடூர செயல்.
காட்டுத்தீயினால் ஏற்படும் சேதங்களும், இழப்புகளும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
நம் தலையை நாமே கொள்ளி வைப்பதற்கு சமம். மடி அறுத்த பிறகு பால் கறக்க முடியுமா?
காட்டில் தீ
வைப்பதற்கான காரணங்கள்:
1. காட்டுக்குள் ஆடு,மாடுகள் மேய்ப்பதர்க்கும், விறகு எடுப்பதற்கும் வன துறையும்,
அரசும் அனுமதி மறுப்பதால், வனத் துறைக்கும், அரசுக்கும் எதிராக பழி வாங்குவதற்காக
வைக்கப்படும் தீ (எங்களுக்கு பயன்படாதது, யாருக்கும் பயன்படகூடாது)
2. காட்டுக்குள் தீ
வைத்தால், தீயினால் ஏற்படும் புகை, மேலே சென்று- மேகங்களில் கலந்து மழையாக
பொழியும் என்ற தவறான நம்பிக்கை. (இது புகழ் பெற்ற மூடநம்பிக்கை)
3. காட்டு ஓரங்களில்
பீடி, சிகரெட் புகைபவர்கள் அணைக்காமல் விட்டெரிவது.
இலட்சக்கணக்கான
ஆண்டுகளாக பல்லுயிர் துடிப்புடன் உருவாகிய காடுகளை, அது சார்ந்து இருக்கும்
உயிரினங்களை, சில மணி நேரங்களில், தீயினால் அழிப்பது, மனிதர்களால் மீட்டு எடுக்க
முடியாத பேரிழப்பாகும். மனிதர்களின் பழிவாங்கும் கொடூர செயலையும், அறியாமையும்
எப்படி மாற்ற போகிறோம்?
No comments:
Post a Comment