“கொலை வாளினை எடுடா
கொடும் செயல் புரிவோர் அறவே” என்று புரட்சி கவிஞர் பாடினார். படத்தை பாருங்கள் ‘கொடும் செயல் புரிவோர் கொலை
வாளினை’ கையில் வைத்திருக்கிறார்களே என்ன செய்வது? இந்த கொலைகாரர்களிடம் சிறு
குழந்தையை போல, சிறுத்தை சிக்கியிருக்கிறதே? என்ன குற்றம் செய்தது? ஏன் இந்த கொலை
வெறி?
பூனை குடும்பத்தில்
புலியை விட சிறுத்தை வலிமை குறைந்தது என்றாலும் தன் இரையை வேட்டையாடும் போது
நெடும் பாய்ச்சல் பாயும் ஆற்றல் பெற்றது. சிறுத்தை எளிதில் மரம் ஏறக்கூடியது. அழகிய செம்பழுப்பு மஞ்சள் உடலில் கருப்பு புள்ளிகளுடன்
கலந்து கவர்ச்சியுடன் காணப்படும் சிறுத்தை,
மனிதர்களுடான மோதலில்
சிக்கி இன்றைக்கு பல இடங்களில் கூண்டு வைத்து பிடிக்கப்படும் விலங்குகளில் சிறுத்தை முதலிடம் வைக்கிறது .சிறுத்தைகள் வாழும் இடங்களில் மனிதர்கள்
ஆக்ரமிப்பு செய்ததும்,காடுகளை அழித்து தோட்டங்களை உருவாக்கியதும்,அங்கு கால்நடைகளை வளர்ப்பதும் தான்,மனிதர்களுக்கும்,சிறுத்தைகளுக்கும்
மோதல் ஏற்பட மூல காரணம். மனிதர்களுடன் மோதிய உயிரினங்கள் வெற்றி
அடைந்ததாக வரலாறு இல்லை.இனி எதிர்காலத்தில்(விரைவில்)சிறுத்தைகள் அழிந்து வரும் பட்டியலில் விரைந்து இடம் பிடிக்கும் என
நம்பபடுகிறது.